Monday, July 13, 2009

சங்காவுடன் ஒரு​பேட்டி


அண்ணன் சங்கா, வெள்ளி இடுகை - அதாங்க 25வது வலைபதிவு இடுகை - போட்டிருக்காப்ல. எல்லாரும் மாதிரி பின்னூட்டம் எழுதி வாழ்த்துனா இந்த தம்பிக்கு நல்லாருக்குமா? அதான் அண்ணனை அப்படியே ஒரு பேட்டி எடுத்து அதையே ஒரு இடுகையா போட்டுடலாம்னு..

என்னடா நேத்து பின்னூட்டமே இடுகைன்னான், இன்னைக்கு பேட்டியை இடுகைன்றான், ஒரே கொடுமைக்காரனா இருப்பான் போலிருக்கு... அப்படியெல்லாம் தப்பா நெனச்சு ஜகா வாங்கிடாதீங்க! ப்ளீஸ் படிங்க.

என் அண்ணன் சங்கா பத்தி தெரிஞ்சுக்கு இது ஒரு புண்ணான வாய்ப்பு. அண்ணன் சங்கா பத்தி சொல்ல தேவையில்லைன்னு சொல்ல ஆசைதான்; இருந்தாலும் கடல் போல் விரிந்திருக்கும் இந்த வலையுலகத்துக்கு அண்ணன் பற்றிய சிறு அறிமுகம் அவசியம்தான்:

அண்ணன் சங்கா பதிவுலகத்து வந்தது ஜுன் 2009லதான். இருந்தாலும் இந்த சமீப காலத்திலேயே நிறைய மொக்கைகளும் மோட்டுவளைச் சிந்தனைகளும் போட்டு, தன்னோட வலைபதிவின் மூலம் நிறைய பேரை சிதைச்சு சின்னாபின்னப் படுத்தி இப்ப 25வது பதிவ தொட்டிருக்கார்.

நான், அண்ணன் வலைபதிவின் நிரந்தர கஸ்டமர் ஆகிவிட்டபடியாலும், ​ரொம்பவும் பாதிக்கப்பட்டிருப்பதாலும் அதை நிவாரணப்படுத்திக் (நிதானமா படிங்கய்யா) கொள்ள வேண்டிய தேவையில் விழைந்ததே இந்த பேட்டி:

சரி ஆரம்பிப்பமா?

அண்ணன் இருக்கிறது அமெரிக்காவுல, அதனால கூகிள்-டாக்ல ஆரம்பமான பேட்டி இது.

இருங்க, அண்ணன் லாக்-இன் ஆவட்டும்.

காலடி (மிரளாதீங்க, இது நம்ம வலைபதிவோட செல்லப் பேரு): அலோ, அலோ, ண்ணா?

சங்கா: (மெஸேஜ் அனுப்புகிறார்)​வெயிட்! கனெக்டிங்..

காலடி: சீக்கிரம்ணா..

சங்கா: அட பொறுங்க தம்பி, ஆங் இதோ கனெக்டட்.​கெட்டிங் மை வாய்ஸ்?

காலடி: க்ளியரா இருக்குங், நான்தான் காலடி பேசறேங்ணா

சங்கா: காலடியா? என்னப்பா இது புதுசாயிருக்கு?

காலடி: இல்லீங்கணா, இதுதான் நம்மோட வலைபதிவு பேரு, அதான் காலடி போட்டோல்லாம் போட்டு, அலை கண்டும் விலகாமல்-ன்னு இருக்குமே..

சங்கா: அட ஆமா, அது காலடியா? நான் ரொம்ப நாளா காவடின்னுல நெனச்சுக்கிட்டு இருந்தேன்? சரி விடு. அதென்னப்பா திடீர்னு பேட்டி, கீட்டின்னுகிட்டு?

காலடி: வெற்றிகரமான 25வது பதிவு, உங்களோட பதிவுலக அனுபவம், இதுங்கள பற்றி அறியவும், ஏனைய பதிவர்களுக்கு தெரியப்படுத்தவும்தான் இந்த பேட்டிங்ணா

சங்கா: கொஞ்சம் ஓவரா தெரியுதே..? இருந்தும் தம்பி கேக்கிறதால பண்ணிட்டா போச்சு. சரி ஆரம்பிப்பா உன்னோட பேட்டிய

காலடி: முதலில் தங்களின் 25வது வலைபதிவுக்கு காலடி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டவர்களாகிறோம்!

சங்கா: இதென்னப்பா நல்லா பேசிட்டிருந்திட்டு, திடீர்னு லேகியம் விக்கறவன் கணக்கா கூவறே? அதான் நமக்கு வரலியே சும்மா சாதாரணமாவே பேசு

காலடி: சரிங்ணா. முதல்ல உங்கள பத்தி சொல்லுங்ணா

சங்கா: பேட்டி எடுக்கிறவன் எதுக்குப்பா அண்ணா நொண்ணாகிட்டு? சங்கான்னு கூப்பிடுப்பா

காலடி: சரிங்ணா.. ஸாரி சங்கா, உங்களப் பத்தி

சங்கா: என்னப் பத்தி என்னப்பா சொல்றது, பிறந்தது ஒரு ஊரு பொழைக்கிறது ஒரு ஊரு. இப்ப இருக்கிறது கலிபோர்னியாவுல. வூட்டுக்காரம்மா பேரு தங்கமணி. ஒரு மகன். இங்க பீச்ல போறது வர்ரது, பார்க்ல ஜீன்ஸ் மாட்டிட்டு திரியறது இப்படி வெள்ளச்சிங்க, கருப்பிங்ன்னு பாகுபாடு இல்லாம சைட் அடிச்சிக்கிட்டு திரியறேன். அதாவது நாம வேலை பாக்குறது இல்ல, பாக்குறதுதான் நம்ம வேலையே! பார்ட் டைமா ஒரு கம்பெனில வேலை பாத்துக்கிட்டு இருக்கேன். இப்ப வரவர கம்பெனி கேஃப்டீரியா மெனு ஒண்ணும் சரியில்லாததால, வேற கம்பெனி மாத்தலாமான்னு மோட்டுவளைய பாத்துக்கிட்டிருக்கேன்.

காலடி: ஆங்.. மோட்டுவளைன்னதும் ஞாபகத்துக்கு வருது.. உங்களோட மோட்டுவளை சிந்தனைகள் வலையுலகத்தில ரொம்ப பேமஸ்ங்கிறது..

சங்கா: ரொம்ப சொறியாதடா

காலடி: ஓகே. வாட் ஈஸ் மோட்டுவளை சிந்தனைஸ்?

சங்கா: குட் கொஸைன். இந்த ப்ரபஞ்சத்தில ஒரு விஷயம் இன்னொரு விஷயத்தை உள்ளடக்கியிருக்கு, இல்ல இன்னொரு விஷயத்தோட தொடர்ச்சியா இருக்கு. சில சமயம் ஏற்கனவே நடந்த விஷயத்தோட மீள்பதிவாவும் இருக்கு. ஆக மொத்தம் இந்த விஷயங்களெல்லாம்...

காலடி:ண்ணா.. ண்ணா...

சங்கா: என்ன?????

காலடி: ஒண்ணுக்கு வாரம மாரி இருக்குங், போயிட்டு வந்துர்ரேனுங்

சங்கா: கருமம் பிடிச்சவன்டா, பேட்டிக்கு வாரவன் இதெல்லாம் முடிச்சு தொலச்சிட்டு வரக்கூடாது. போய்ட்டு வா

(காலடி ஒண்ணுக்குப் போவதால் - காலோடு இல்லீங், கா..ல..டி - நீங்களும் உச்சா போயிட்டு, ஜிப்ப​போட்டுட்டு, தண்ணி குடிச்சிட்டு வந்துருங்க, பாப்பம்)

காலடி: ண்ணா, வந்துட்டேன்

சங்கா: ஆங், இப்பதான் பில் காலின்ஸ் பாட்டு ஒண்ணு யூட்யூப்ல கேட்டுகிட்டு இருந்தேன்.. என்ன பேசிட்டு இருந்தோம், மறந்து போச்சு

காலடி: மோட்டுவளை சிந்தனை..

சங்கா: கரெக்ட். விஷயங்கள் எல்லாம் எப்படி பகுக்கப்பட்டிருக்குன்னு புரிஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன். கரெக்டா? இப்ப ஒவ்வொரு விஷயத்தையும் உள்ள பூந்து, ஸ்ரெயிட்டா போயி அப்படியே லெப்ட், ரைட், யூ டர்ன் எல்லாம் போட்டா, ஒரு விஷயத்தில இருந்து இன்னொரு விஷயத்துக்குப் போயிடலாம்.

காலடி: ஒண்ணும் புரியிலீங்?

சங்கா: அட தம்பி, இப்ப வீட்ல நீ மல்லாந்து படுத்துக் கிடக்கிறப்ப என்ன தெரியும்?

காலடி: ஊட்டுக் கூரை தெரியுங்

சங்கா: குட், அப்படியே கொஞ்சம் போகஸ் பண்ணுனா?

காலடி: ண்ணா, விட்டம் தெரியுதுங்ணா, விட்டத்தில பல்லி கூட இருக்குங்ணா

சங்கா: சரியா சொன்னே! இதுதான் ஆரம்பம்!! இப்ப பல்லியிருக்கே அது எப்படியிருக்கு?

காலடி: பல்லி ஒல்லியாயிருக்குங்

சங்கா: விட்டம் பல்லி, பல்லி ஒல்லி - மோட்டுவளை சிந்தனை அவ்ளோதாண்டா​கோமுட்டி தலயா!

காலடி: அதெப்பிடிங்ணா மோட்டுவளை சிந்தனையாகும்?

சங்கா: அடே.. விட்டம் நம்ம வீட்ல இருக்கு, பல்லி எங்கிருந்து வந்திருக்கு?ஜுராஸிக் ஏஜ்ல இருந்து. ஏன்னா அது டைனோசரோட இனம். இப்ப டைனோசருக்கும் நம்ம வீட்டு விட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?

காலடி: ஒரு சம்பந்தமும் இல்லீங்க

சங்கா: நோ. அதை அப்படியே விட்டுடக் கூடாது. மெல்ல அந்த நூலைப் பிடிச்சு அதோட இணைப்புகளெல்லாம் எங்கெங்க​போகுதுன்னு தேடணும்டா

காலடி: கரெக்ட்டுங்ணா. மோட்டுவளை பக்கமா ஒரு நூல்.. இல்ல இல்ல.. டிவி கேபிள் போகுதுங்ணா அத சொல்றீங்களா?

சங்கா: அதுவும் ஒரு இழைதான். இந்த இழையோடு போனீன்னா வர்றதுதான் இது - கேபிள், டிவி, சீரியல், சினிமா, ஸ்பீல்பர்க், பர்கர், வண்டி ஆச்சு மக்கர், ஊத்து கொஞ்சம் லிக்கர், மாட்டு நீ நிக்கர், இதை​எழுதினா டக்கர்!

காலடி: ஆமாங்ணோ, ஒரு ப்ளோ சிக்கிற மாதிரி இருக்குங்!

சங்கா: இப்ப புரிஞ்சுதா மோட்டுவளை சிந்தனையோட மகிமை?

காலடி: சூப்பருங்ணா. இதை படிக்கிற, அப்புறமா மோட்டுவளை சிந்தனையை ப்ராக்டீஸ் பண்ணப்​போற நம்ம காலடியோட தீவிர, அதி தீவிர வாசக கண்மணிகளுக்கு..

சங்கா: டே.. ​டே.. போதுண்டா உன் அளப்பற! போடறது மாசத்துக்கு 3 இடுகை. அதுக்கு வாரது 4 பின்னூட்டம்.. இதில இந்த பில்ட் அப்பு!

காலடி: ஹிஹி.. சும்மா ஒரு விளம்பரந்தான்!​மோட்டுவளை சிந்தனை செய்யற வாசகர்களுக்கு நீங்க கொடுக்கும் டிப்ஸ்?

சங்கா: மோட்டுவளைதான் சிந்தனையோட மையம். நீங்க படுத்துக்கிட்டு, உக்காந்துகிட்டு ஏன் நின்னுக்கிட்டு கூட சிந்திக்கலாம்.. ஆனா மோட்டுவளைய வெறிக்கறது முக்கியம். எப்படி வெறிக்கணும்னு தெரியாதவங்க, என்னோட அனானிக்கதையை வந்து படிங்க. நாம இப்படி மோட்டுவளையா சிந்திக்கும் போது நிறைய தடங்கல்கள் எல்லாம் வரும்.. உதாரணமா, போன் அடிக்கும், பொண்டாட்டி கூட அடிக்கும், குட்டிப்​பையன் வந்து குமட்டிலயே குத்துவான் எது எப்படினாலும் சிந்தனைய விடக்கூடாது. மோட்டுவளையை ஒரு மோட்ச யுக்தியா கருதி வெறிக்கணும்.. வெறிக்கணும். அன்ட், திஸ் ஈஸ் த பாட்டம் லைன்: மோட்டுவளை சிந்தனை செய்யும்போது பல்லி இல்லாத இடமா பாத்து உக்காருங்க.. ஏன்னா சில டைம் பல்லி ஒண்ணுக்கு போயிடுது

காலடி: நன்றிங்! ரொம்ப உபயோகமான குறிப்பு. அடுத்த கேள்வி..

சங்கா: கேளுப்பா

காலடி: எப்படி உங்களுக்கு பதிவு எழுதணும்னு தோணுச்சு?

சங்கா: நான் ரொம்ப நாளா பதிலகத்த மேயி மேயின்னு மேஞ்சுட்டு, இனிமே இந்த அக்கிரமத்தை பொறுக்க முடியாதுன்னு பொங்கி எழுந்ததுதான் காரணம். இந்த பொங்கல்ல என் மண்டைக்குள்ள மணிச்சத்தமெல்லாம் கேட்டுது. மணிச்சத்தம் தங்கமணி என் மண்டைல குட்டினதால வந்தாதான்னு அபத்தமா எல்லாம் கேக்கக் கூடாது. இதப்பத்தி விபரங்களை முதல் மொக்கை, முற்றும் மொக்கை-ன்னு என்னோட முதல் இடுகைல பாக்கலாம்.

காலடி: என்ன மாதிரி எழுதணும்னு முன்னமே ஒரு முடிவு பண்ணியிருந்தீங்களா?

சங்கா: அப்கோர்ஸ். எழுதறதுன்னா மொக்கை, மற்றும் மொக்கை, மேலும் மொக்கையைத் தவிர வேறெதுவும் கிடையாதுன்னு முதல்யே சங்கல்பம் எடுத்துக்கிட்டேன். மொக்கை போடவும் ஒரு ‘இது’ வேணும்ல! எப்பிடி போடறது? யோசிச்சுப் பார்த்து, எனக்குள் நானே நிகழ்த்தும் பல வித உரையாடல்களைப் பதிஞ்சாலே அது மொக்கைதான்னு முடிவு பண்ணீட்டேன். என்னடா, ஒரு பைத்தியத்துக்கிட்டே மாட்டிக்கிட்டோம்னு நினைக்கிறீயா?

காலடி: ச்சே..ச்சேசேசே

சங்கா: நீ நெனப்படா. இருந்தாலும் கரெக்ட்! நீ ஒரு பைத்தியக்காரன்! நானும் ஒரு பைத்தியக்காரன்! அவ்வளவுதான் மேட்டரு!

காலடி: இத ஒரு தத்துவமா எடுத்துக்கிறேங்ணா. அடுத்த கேள்வி

சங்கா: ம்

காலடி: இதுவரைக்கும் 25 பதிவு போட்டிருக்கீங்க. இந்த பதிவுலகத்தைப் பற்றிய உங்க புரிதல் என்னங்?

சங்கா: ஹும்ம்ம்ம்ம்ம்..

காலடி: ண்ணா, மெதுவா பெருமூச்சு விடுங்க, ஹெட்போன்ல கேக்கறதால.. காதெல்லாம் கூசுதுங்..

சங்கா: யெஸ்.. 25 பதிவுகள்.. 25 மொக்கைகள்.. 234.. பின்னூட்டங்கள். ஆ​வேசமாகவும் ஆறுதலாகவும் ஒரே சமயத்தில உணர்கிறேன். அனுபவம்னு பாத்தீன்னா.. எவ்வளவுதான் மோட்டுவளைய பாத்து சிந்திச்சாலும் சிலசமயம் ஒரு மொக்கை கூட தோணாது. என்ன எழுதறதுன்னே தெரியாம சிலசமயம் பின்நவீனத்துவமா ஏதாவது சிறுகதைய எழுதீடலாமாங்கிற அளவுக்கு ஆபத்தான சிந்தனைகள் கூட வந்திருக்கு. இருந்தாலும் எப்படியோ தம்கட்டி சமாளிச்சு ஒரு நாளைக்கு ஒரு இடுகைன்னு போட்டுருவேன். பதிவு தான் முக்கியம். பின்னூட்டங்கள் இல்லைன்னு தோணினாலும்.. ரெண்டு மூணு பின்னூட்டங்களைப் பாத்தா இதுக்காகவே நாம பின்நவீனத்துவம் பற்றி சிந்திக்கிறத ஒத்திப் போடலாம்னு சமாதானமாயிடுவேன்.

காலடி: நீங்க எப்ப உங்க வலைப்பூவ ஆரம்பிச்சீங்ணா?

சங்கா: கோடையின் முதல் நாளில், தந்தையர் தினத்தில் வலைப்பூ தொடங்கினேன். ஏன்னா அன்னிக்குதான் அமெரிக்காவுல கத்திரி வெய்யில் ஸ்டார்ட். பத்தாததுக்கு தமிழ்மணம், தமிழிஷ் இவைகளில் படிக்கப் படிக்க, ​கத்திரி வெயிலோட உக்கிரத்தில அக்கினிக் குஞ்சாக இருந்தவன் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சேன். அந்த எரிச்சல்ல ஆரம்பிச்சதுதான் இந்த என்னுள்ளே வலைப்பூ

காலடி:ஒரு பொதுவான கேள்வி. அது ஏங்கணா இந்த மாதிரி கொலவெறியோட இருக்கிறவங்களே வலைப்பூவா தொடங்கிகிட்டு இருக்காங்க?

சங்கா: நல்ல கேள்வி! ​சென்ஷிகிட்ட கேட்டுச் சொல்றேன். அவருதான் ஒத்த வார்த்தைக்குள்ள ஓராயிரம் சிந்தனை வச்சிருப்பாரு!

காலடி: சென்ஷி-னதும் ஞாபகத்துக்கு வருது.. பதிவுலகத்திலயே முதன்முதலா, வலைப்பூவின் ரெகுலர் கஸ்டமர்கள்-ங்கிற மரபை தோற்றுவிச்சது நீங்கதான்னு பரவலா பேசிக்கிறாங்க. இதப்பத்தி கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா?

சங்கா: ஹா.. ஹா..! கரெக்டுதான். நம்ம எழுத்த பாத்து படிக்க வர்றவங்க, ஒண்ணு, முத மொக்கையிலேயே மட்டையாகிடறாங்க இல்ல மிரண்டு ஓடிறாங்க, அதுவுமில்லன்னா சும்மா பேருக்கு ஒரு சிரிப்பான போட்டுட்டு அவங்கவங்க ஜோலியப் பாத்துக்கிட்டு போயிட்டே இருக்காங்க. இத எப்படி சமாளிக்கறதுன்னு யோசிப்ப வந்ததுதான் ரெகுலர் கஸ்டமர் ஐடியா. இந்த திட்டத்தில நீ கூட நம்ம ரெகுலர் கஸ்டமர் ஆயிட்ட. சென்ஷி அதேமாதிரிதான். இது இன்னும் பெருகணும். பெருகும். கூடிய சீக்கிரம் வாய்ஸ் பேஸ்டு கஸ்டமர் கேர் சென்டர் ஒண்ணு தொடங்கலாமான்னு மோட்டுவளையப் பாக்கிறேன்.

காலடி: சூப்பருங்ணா! உங்க இடுகைகளோட லட்சியம் மொக்கை மற்றும் மொக்கைகள்தான்னு தெளிவுபடுத்தீட்டிங்க. இப்ப அத சார்ந்து ஒரு கேள்வி - இடுகைகளுக்கு தலைப்பிடுவது எவ்வளவு முக்கியம்?

சங்கா: இடுகைகளுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கிறமோ சிலசமயம் தலைப்புகளுக்கும் அவ்வளவு நேரம் ஆயிடறது உண்டு. தலைப்புங்கிறது எலிப்பொறிக்குள்ள..

காலடி: ண்ணா, எதா இருந்தாலும் சுருக்கமா சொல்லீருங். ஏன்னா நாம பேசுனது எல்லாத்தயும் நான் தனியா ஒக்காந்து டைப்படிக்கோணும்.

சங்கா: இவன் ஒருத்தன்.. நல்லா ஒரு ப்ளோ வரும் போதுதான் ஒண்ணுக்கடிக்கணும், டைப்படிக்கணும்னு காமடி பண்ணிக்கிட்டு..

காலடி: இல்லீங். நீங்க கன்டினியூ பண்ணுங்

சங்கா: ஆங்.. தலைப்புங்கிறது எலிப்பொறிக்குள்ள நாம வக்கிற ஊசிப்​போன வடைமாதிரி. அந்த வாசத்த வச்சுதான் நாம எலி புடிக்க முடியும். உதாரணத்துக்கு என்னோட இடுகை தலைப்புகளைப் பாத்தீன்னாக்க.. சுசீலாவும் மஞ்சளழகியும் மற்றும் பின் நவீனத்துவமும், உப்புமா பீட்ஸா ஸூஷி மற்றும் கவிதைகள் ரசனைகள், வெளிக்கா வெள்ளரிப் பிஞ்சா - மரத்தடி மாமுனி இந்த ரேஞ்சுக்கு இருக்கும். இதெல்லாம் ஒரு டெக்னிக்கு!

காலடி: இந்த குறிப்பும் நிச்சயம் நம்ம காலடியோட தீவிர மற்றும் அதிதீவிர வாசக...

சங்கா: டே...​டே...​டேய்...

காலடி: சரிங்ணா. மரத்தடி மாமுனியப் பத்தி சொல்லுங்களேன்

சங்கா: மரத்தடி மாமுனி - ஒரு சின்னக் குறியீடு அவ்வளவுதான்

காலடி: சின்னக் குறியீடுன்னா... அந்த மாதிரிங்களா??

சங்கா: புத்தி எங்க போவுது பாரு. வாயக் கழுவுடா. குறியீடுன்னா ஒரு அடையாளம், அர்த்தம் அவ்வளவுதான். மரத்தடி மாமுனிங்கிறது நம்மளோட சிந்தனைகள் மோட்டுவளையத் தாண்டி ஊர் மேயப் போறதுக்கான குறியீடு. முனின்னாலே எல்லாப் பசங்களுக்கும் ஒரு கிலி இருக்கத்தானே செய்யுது? சாதா முனியே அந்த ரேஞ்சுன்னா, நம்முது மாமுனி? எப்படியிருக்கும் எபெக்ட்டு?

காலடி: ண்ணா, திரும்பவும் ஒண்ணுக்குங்ணா...

சங்கா: அடிங்... அமுத்திட்டு அப்படியே ஒக்கார்ர... ரெண்டு இடுகை போட்டிருப்பேன் இந்நேரம். போனா போவுதுன்னு பேட்டி​கொடுத்தா... டார்ச்சர் பண்றான் டார்ச்சர். ​ரேஸ்கல்..

காலடி: .... சரிங்ணா

சங்கா: ஆங், அப்படி சமத்தா அடுத்த கேள்விய ​கேளு பாப்பம்?

காலடி: அடுத்த கேள்விங்.. சில இடுகைகள்ல தீவிரமான சிந்தனையெல்லாம் தலைப்படுதே?

சங்கா: நீ என்ன கேக்கிறன்னு புரியுது. கவிதை, மொழி பற்றிய இடுகைகள் பத்திதானே??

காலடி: சரியா சொன்னீங்ணா! ​ஹைகூ-வை நம்ம பள்ளி பாடத்திட்டத்தில சேர்க்கணும், தமிழ் மொழில ஜ, ஷ, ஹ, ஸ, க்ஷ இந்த மாதிரி எழுத்துக்களுக்காக மாற்று வரிவடிவத்தை புதுசா சேக்கணும்.. இந்த மாதிரி இடுகைகள் எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைக்கின்றன?

சங்கா: ஹைகூ ஒரு எளிமையான கவிதை வடிவம். இப்ப இணையத்திலேயே சில பேரு கவிதைங்கிற பேர்ல டார்ச்சர் கொடுக்கிறாய்ங்க.. சரோஜாதேவி புக்கை எடுத்து கங்காரு மாதிரி அங்க இங்க தாவி தாவி நாலு வார்த்தைய எடுத்து பிச்சு பிச்சுப் போட்டா அதை சர்ரியலிச கவிதைங்கிறான்.. நியூஸ் பேப்பரில இருந்து எடுத்து அத மடிச்சு மடிச்சு எழுதினா விமர்சன கவிதைங்கிறான்.. பிட் நோட்டீஸ், சினிமா போஸ்டர், சுவராட்டி, மசால் தோசை மடிச்சிருந்த பேப்பர், சரக்குப் பாட்டில் லேபிள்.. இதில இருந்து திருடி மடிக்கப் பட்ட வார்த்தைகள் தாம் பின்நவீனத்துவ கவிதையாம்.. எல்லாம் வெறும் கிளிஷேக்கள்! என்ன கொடுமை ஜெகநாதன்?

காலடி: ஜெகநாதன்னு சொல்லாதீய, காலடின்னு சொல்லுங்

சங்கா:எழுதும்போது என்ன எழவயோ போட்டு எழுதிக்கோ.. மேட்டருக்கு வருவோம்.. ஸோ கவிதைங்கிற எளிய வடிவம் இப்ப புறக்கணிக்கப்பட்ட வருவதால, நான் ஹைகூ, ஸைக்கோகூ, ககீகூ இப்படி ஒதுங்கீட்டேன். ஹைக்கூ மாதிரி பாடத்திட்டத்திலே கொடுக்கக் கூடாது? பசங்களுக்கும் ஒரு ஆர்வம் வரும், அப்புறம் மெல்ல கொஞ்சம் பெரிய கவிதை, அப்புறம் அப்பிடியே நூல் பிடிச்சு மரபுக்கவிதைன்னு போயிரலாம்.

காலடி: ஐடியா அட்டகாசமா இருக்குங்! அப்புறம் இந்த தமிழ் புது எழுத்துக்கள்..?

சங்கா: அது கொஞ்சம், சீரியஸான மேட்டர் - கம்- இடுகை. எப்படி எனக்குள்ள இது உதிச்சதுன்னு இன்னும் பிரமிப்பாயிருக்கு. இது தேமரதுத் தமிழோசை உலகமெலாம் சரியாகப் பரவும் வகை செய்திடுவோம் என்கிற ஆசையினால விளைஞ்சதுன்னு ஆசுவாசப்பட்டுக் கொள்கிறேன்.

காலடி:ரொம்பச் சரிங்ணா! நீங்க எதுவும் கவித கிவித இந்த மாதிரி எழுதியிருக்கீங்களா?

சங்கா: கவிதை எழுதவில்லையென்றாலும் கவிதையைப் பற்றி நி​றைய எழுதிவிட்டேன். ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத சில நேரங்கள்ல சில வரிகள் என்னையும் மீறி வந்துவிடுவதுண்டு; இந்தமாதிரி..
முத்துப் பல்லழகி
மோகனச் சிரிப்பழகி
தெத்துப் பல்லழகி
தெவிட்டாத தேனழகி
குத்திக் கொல்லாதே
கோல மயிலழகி
சித்தம் கலங்குதடி
சீக்கிரம் வாயேண்டி!!!
இன்னும் கூட ரெண்டு மூணு எழுதியிருந்தேன்.. இப்ப ஞாபகத்துக்க வரமாட்டேங்குது

காலடி: சரிதாங்ணா.. நமக்குதான் முந்தைய நிமிஷம் வரைக்கும் தான் சமீபம்னு நீங்களே எழுதியிருக்கீங்களே

சங்கா: சபாஷ்டா தம்பி.. நம்ம ரெகுலர் கஸ்டமர்ங்கிற நிரூபிச்சிட்டே

காலடி: அப்பப்ப வீக்-என்ட் போனஸ், விளம்பரம், சென்யோரித்தா, ஸீரியல் இடுகை என்றெல்லாம் பட்டாசு கிளப்புறீங்களே? அதோட ரகசியத்தை ஏன் நீங்க நம்ம காலடியோட தீவிர, அதி..

சங்கா: ச்சு..! போதுண்டா. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே... இருந்தாலும் ​கேக்கிறே, சொல்றேன்: நான் இங்க கடையில சாப்பிடறது ஒரு காஞ்சு ​போன வெண்ண ரொட்டிதான். அத கொடுக்கிறது ஒரு காஞ்ச கருவாச்சி. இருந்தாலும் அவளை ஸென்யோரித்தான்னு சொன்னா ஒரு கவர்ச்சி வருதுல்ல. இப்படி ஒரு சவக் சவக் பர்கர் இடுகைல கொஞ்சம் tomato slice, lettuce, mayonnaise, mustard, and other condiments எல்லாம் போட்டு தெளிச்சா இடுகை நல்லா மணமா சுவையா ​பொன்னிறமா வருங்கிறது என்னோட கருத்து.

காலடி: ரொம்ப கரெக்டுங்ணா

சங்கா: வீக் என்ட் போனஸ், ரீமிக்ஸ் பாட்டு, சீரியல் இடுகை​இப்படியெல்லாம் வலைப்பக்கத்தை கவர்ச்சிகரமா வச்சிக்கிட்டாதான், ரெகுலர் கஸ்டமர்களை நம்மபக்கம் வச்சுக்க முடியும்.

காலடி: சரிங்ணா. இந்த 25-வது வலைப்பதிவ எப்படி கொண்டாடினீங்க?

சங்கா: அப்படியொண்ணும் சிறப்பா இல்ல. இங்க எங்காவது பீச் பக்கமா போயி ஏதாவது பீட்ஸா, இல்ல ஸுஷி இதுமாதிரி ஏதாவது திங்கலாமான்னு பாத்தேன். ஏற்கனவே ஆபிஸில எல்லாரும் ஏண்டா எப்ப பாரு முழு போண்டா அப்படியே முழுங்கினவன் மாதிரி இருக்கேன்னு கேக்கிறாங்க.. ​பேசாம இதைக் கொண்டாடதயே ஒரு இடுகையா போட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்

காலடி: ஏங்கண்ணா, உங்களுக்கு கொண்டாட்டம்னாலே பிடிக்காதா?

சங்கா: பெருசா அப்படியொண்ணும் இல்ல. என் பால்யக் காலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் கிடையாது. பிறந்த நாளைக்கு ஒரு பாட்டில் பட்டை, ​தொட்டுக்க ஊறுகா பட்டை கிடைக்கும். சில டைம் சரக்கடிச்சுட்டு சைட் டிஷ்ஷா சுண்டல் வாங்க கோயிலுக்கு போவேன். ​அம்மா முடிந்தால் என் முதுகில் நாலு வைக்கலாம். அவ்வளவுதான் நம்ம பொறந்த நாளு கொண்டாட்டம்.

காலடி: ரொம்ப நன்றிங்ணா. பேட்டி இனிதே முடிகிறது. எனக்கு ஒண்ணுக்கு வேற முட்டுகிறது.. அதால இப்ப முடிச்சுக்கலாமா?

சங்கா:​சரி சரி... எது எப்படின்னாலும் பேட்டி அசத்தலா வரணும் சொல்லிட்டேன்.. அதென்னமோ பேரு சொன்னியே, காவடியா, காமடியா???

காலடி: ஏனங் காமடி பண்ணிக்கிட்டு, காலடி-ங்ணா

சங்கா: ஆங்.. காலடி! அதில வந்து நாளைக்கு பாக்கிறேன்.இங்க ஜன்னல் வழியா ஒரு காக்கி கலர் ஷார்ட்ஸும், வெள்ளக் கலர் டி-ஷர்ட்டும் போட்ட ஒரு வெள்ள பிகரு தெரியுது..! எனக்கு இதயத்தில இருந்து இரத்தம் அப்படியே கொப்பளிச்சு வாய் வழியா வந்திட்ட மாதிரி இருக்குப்பா! நாம அப்புறம் சந்திப்போம்.. ​பை..​பை!

காலடி: ண்ணா.. ண்ணா.........????? அண்ணன் அவசர வேலை நிமித்தமாக ஜன்னல் வழியே பாய்ந்து விட்டதாலும் காலடிக்கு இந்த பேட்டியின் போதே​காலோரம் கொஞ்சம் ஈரமாகிவிட்டபடியாலும், பேட்டி இனிதே முடிகிறது.

அண்ணன் சங்காவுக்கு (நல்லா நிதானிச்சு படிங்க, சங்கர் இல்ல சங்கா) இந்த 25-வது இடுகைக்கு வாழ்த்துக்கள்! அண்ணன் இன்னும் மெல்ல மெல்ல 50, 250, 250^50, 250^250 என நிறைய மொக்கைகளைப் போட்டு சிறக்க காலடியின் தீவிர அதி தீவிர வாசகக் கண்மணிகள் சார்பில் வாழ்த்துகிறோம்!

டிஸ்கி:
******
- முழுக்க முழுக்க காமடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.
- அண்ணன் இதற்காக அமெரிக்காவிலிருந்து ப்ளைட் பிடித்துக்​கொண்டு ​பெங்களூரு வந்தெல்லாம் முதுகில்​மொத்த மாட்டார் என்ற ஊக்கத்தில் எழுதப்பட்டது இது!
******

37 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

சூப்பர் நையாண்டி

கலக்கல்

சிநேகிதன் அக்பர் said...

யப்பா... முடியல.... :)

சென்ஷி said...

ஆஹா.. காலையில இந்தப் பதிவை நான் பார்க்காம போயிட்டேனே :(

அண்ணன் சங்காவை துணிச்சலாக பேட்டி எடுத்து அதை காலடியோட தீவிர மற்றும் அதிதீவிர வாசக நெஞ்சங்களுக்கு சமர்பிச்ச மன உறுதிக்கு எந்த முக்குல சிலை வைக்குறதுன்னு யோசனையில உக்கார வச்சுட்டீங்களே தலைவா :)

சென்ஷி said...

/
நான், அண்ணன் வலைபதிவின் நிரந்தர கஸ்டமர் ஆகிவிட்டபடியாலும்,//

நானும் நானும்.. ரெகுலர் கஷ்டமர் தான் :)

சென்ஷி said...

//
காலடி: வெற்றிகரமான 25வது பதிவு, உங்களோட பதிவுலக அனுபவம், இதுங்கள பற்றி அறியவும், ஏனைய பதிவர்களுக்கு தெரியப்படுத்தவும்தான் இந்த பேட்டிங்ணா//


நீங்க பேட்டிங். சங்கா பவுலிங். நான் கீப்பிங் :)

சென்ஷி said...

//அதாவது நாம வேலை பாக்குறது இல்ல, பாக்குறதுதான் நம்ம வேலையே! //

இது மோட்டுவளை சிந்தனையோட முக்கியத்துவம் ஆச்சே :)

சென்ஷி said...

//இந்த ப்ரபஞ்சத்தில ஒரு விஷயம் இன்னொரு விஷயத்தை உள்ளடக்கியிருக்கு, இல்ல இன்னொரு விஷயத்தோட தொடர்ச்சியா இருக்கு. சில சமயம் ஏற்கனவே நடந்த விஷயத்தோட மீள்பதிவாவும் இருக்கு. ஆக மொத்தம் இந்த விஷயங்களெல்லாம்..//

மறுபடியும் என்னை அட போட வச்சிராதீங்க தலைவா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வேண்ணா போட்டுக்கறேன்! :))

சென்ஷி said...

//இப்ப ஒவ்வொரு விஷயத்தையும் உள்ள பூந்து, ஸ்ரெயிட்டா போயி அப்படியே லெப்ட், ரைட், யூ டர்ன் எல்லாம் போட்டா, ஒரு விஷயத்தில இருந்து இன்னொரு விஷயத்துக்குப் போயிடலாம்.//

ரொம்ப சிரமமா இருக்கும் போலருக்குதே.. எதுனா டவுன் பஸ் இந்த ரூட்டுல ஓடுதான்னு கேட்டு சொல்லுங்க ஜெகநாதன் :)

சென்ஷி said...

//சங்கா: விட்டம் பல்லி, பல்லி ஒல்லி - மோட்டுவளை சிந்தனை அவ்ளோதாண்டா​கோமுட்டி தலயா!//

ச்சே.. இப்படில்ல பாயிண்டை பிடிக்கணும். பேசாம அண்ணன் பேருல ஆசிரமம் ஆரம்பிச்சுட வேண்டியதுதான் :)

சென்ஷி said...

//இந்த இழையோடு போனீன்னா வர்றதுதான் இது - கேபிள், டிவி, சீரியல், சினிமா, ஸ்பீல்பர்க், பர்கர், வண்டி ஆச்சு மக்கர், ஊத்து கொஞ்சம் லிக்கர், மாட்டு நீ நிக்கர், இதை​எழுதினா டக்கர்!//

அடடா.. இதுக்கு இந்த வருச இலக்கிய நோபல் கொடுக்க ரெக்கமண்ட் செய்ங்கப்பா யாராச்சும் :)

Nathanjagk said...

அன்பு ஸ்டார்ஜன், மிக்க நன்றி!

வருக அக்பர்! சிரிப்பானுக்கு நன்றிகள்!

அன்பு ​சென்ஷி,
மிக்க நன்றி! எனக்குதான் மனசு படக் படக்குனு அடிச்சுக்குது. என்னடா அண்ணன்கிட்டயிருந்து இன்னும் ​ஒரு பதிலயும் காணோமே, என்ன ​நெனச்சுப்பாரோன்னு பயமாயிருக்கு!
அப்படி எதுவும் கசமுசா ஆயிட்டா நீங்கதான் பஞ்சாயத்து பண்ணி​வெக்கணும். இப்பவே ​சொல்லிட்டேன்.

சென்ஷி said...

//எழுதறதுன்னா மொக்கை, மற்றும் மொக்கை, மேலும் மொக்கையைத் தவிர வேறெதுவும் கிடையாதுன்னு முதல்யே சங்கல்பம் எடுத்துக்கிட்டேன். //

அதனாலதானே தைரியமா பின் தொடர்றோம் :))

சென்ஷி said...

//நீங்கதான் பஞ்சாயத்து பண்ணி​வெக்கணும். இப்பவே ​சொல்லிட்டேன்.//

ஹைய்யா. ஜாலி. அப்ப அண்ணன் இதுக்கு ஒரு எதிர்வினை பதிவு போடுவாரா.. :)))

சென்ஷி said...

உண்மையிலேயே செம்ம கலக்கல் கலாய்ச்சல் பதிவு ஜெகன்.. எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குது.. அமர்க்களமா அட்டகாசப்படுத்திட்டீங்க :))

வினோத் கெளதம் said...

தல என்னாது இது..
பதிவு ரொம்ப பெருசு தான் இருந்தாலும் நல்லாகீது..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரொம்ப நீளமா....................

இருக்கு தல....,

Nathanjagk said...

வணக்கம் SUREஷ்! வணக்கம் வினோத்​கெளதம்!
நீளம் ​கொஞ்சம் ஜாஸ்திதான். நான் ஒவ்வொரு டயலாக்குக்கும் நடுவில ​லைன் ப்ரேக்​போட்டிருக்கிறதால, பிரம்மாண்டமா​தெரியுது! இருந்தாலும் அடுத்து பதிவுகள்ல நீளத்தின் ​மேல் கவனம் ​செலுத்துறேன். நன்றி!
படிக்கிறவங்களுக்கு களைப்பா இருக்கக்க கூடாதுங்கிறதுக்குதான் அங்கங்க அண்ணணோட லிங்குகளை தூவியிருக்கேன். இது மிகுந்த அன்பினால் விளைந்த ஒன்று!

ஷங்கி said...

பாசத்துக்குரிய தம்பி காலடி!,
சிரிச்சுக்கிட்டே படிச்சு, படிச்சுக்கிட்டே சிரிச்சு ஒன் பாத்ரூம் வந்திருச்சுடோய்! போய்ட்டு வந்து மீண்டும் சிரிக்க ஆரம்பிச்சா, நான் முன்ன ஒரு இடுகையில சொன்ன மாதிரி தங்கமணி கவசம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க!
நீங்க இப்பதான் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்ல பறக்க ஆரம்பிச்சிருக்கீங்கன்னு நினைச்சா, இப்பத்தான தெரியுது வீலிங்கே பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு, ரோட்ல கொமரிங்க நிறையவே நடந்து போறாங்களோ?!

ஆனால் கடைசியாக் காவடியை, ச்சை, காலடியை வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் வெள்ளச்சி, கருப்பச்சி மட்டுமில்ல, பிரௌனழகி மஞ்சளழகிலாம் பாப்பேன், அதனால என் இடுகைகளை சரியாப் படிக்கலைன்னு இதிலயிருந்து புரியறதால இன்னும் ஒரு பத்து தடவை படிச்சுட்டு மறுக்கா ஒரு பேட்டி போடுங்க! ஹிஹி!!!

தங்கள் ஆழந்த அன்புக்கும், ரெகுலர் கஸ்டமர்னு நெத்தியடியா விளம்பரம் கொடுத்ததற்கும் நன்றி!
இப்பவாவது, உலக அளவுல.... இல்லாட்டியும், இந்திய அளவுக்கு..... வராட்டியும், தமிழ்நாடு லெவலுக்கு........ வரலைன்னாலும் கூட ஒரு நாலு பின்னூட்டமாவது வருதா பாக்கிறேன்!

ஷங்கி said...

//அடடா.. இதுக்கு இந்த வருச இலக்கிய நோபல் கொடுக்க ரெக்கமண்ட் செய்ங்கப்பா யாராச்சும் :)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

Shanmugam Salem said...

Shanmugam Salem to me (​மெயில் பண்ணியது, இங்கே ​சேர்க்கப்படுகிறது)
நீங்கள் சங்காவிடம் எடுத்த பேட்டி சூப்பர்!!!
உங்களுக்கு ஏன் அடிக்கடி உச்சா வருதுனு தெரியல. நீங்கள் சாட்டிங்கில்
கனெக்ட் செய்து காலடி எடுத்து வைக்கும் சீன் சூப்பர்.
உங்கள் பேட்டி கொஞ்சம் நீ..ளமாக இருப்பதால் கருத்து சொல்ல முடியல. அதான் மெயில் அனுப்புறேன். நான் எழுதிய கமெண்ட காப்பி பன்னி உங்க சைட்ல போட்டுருங்க. சென்ஷி அவருடைய வலைபக்கத்தை நீக்கிவிட்டாரா?

ஷங்கி said...

//ஹைய்யா. ஜாலி. அப்ப அண்ணன் இதுக்கு ஒரு எதிர்வினை பதிவு போடுவாரா.. :)))//

ஒரு இடுகைக்கு மேட்டர் சிக்கிருச்சோ!, அப்ப ஒரு நாளு பல்லியைப் பாத்துக் கில்லியாக வேண்டாம்!. ஐ ஜாலி!

Nathanjagk said...

அன்பு சண்முகம், அன்பிற்கு நன்றி!
நிறைய பேரு நீளத்தை குறை ​சொல்லியிருக்காங்க! நம் காலடியின் தீவிர, அதி தீவிர வாசகக் கண்மணிகள் கண்ணிலேயிருந்து ஒரு சொட்டு கண்ணீரைக் கூட காண சகிக்க மாட்டேன். கரெக்ட் பண்ணிரலாம்.
சென்ஷிட்ட நானே​சொல்லலாம்னு ​நெனச்சேன்.​நேத்து ஏனோ அவரோட வலைப்பூவை அணுக முடியலே! அதனாலதான்​சென்ஷி ​பேர எழுதும்​போது லிங்க குடுக்க முடியலே. இப்ப ​சென்ஷி வலைப்பூ அணுக முடியுது. சண்முகம் டிரை பண்ணிப் பாருங்க.

Admin said...

நல்ல பேட்டி கலக்குறிங்க... வாழ்த்துக்கள்...

Nathanjagk said...

டண்டணக்கா டண்டணக்கா... ​ஹைய்யா, அண்ணன் சங்கா-கிட்டயிருந்து பின்னூட்டம் வந்திருச்சு! ​ரொம்ப நன்றிங்ணா! கிட்டத்தட்ட ரிஸர்ச் ரேஞ்சுக்கு உங்க வலைப்பதிவுல உள்ள பூந்து,​லெப்ட், ரைட், யூடர்ன் எல்லாம் போட்டு ஒரு கிளியரான அண்டர்ஸ்டான்டிங் வந்தப்பறம் தான் ​பேட்டிய​போட்டேன்! நம்ம தீவிர அதி தீவிர வாசக சிகாமணிகள் கட்டாயம் இதுக்கொரு எதிர்வினை ஆற்றுவாங்கன்னு எதிர்பார்க்கிறேன். மீண்டும் அண்ணனுக்கு நன்றி! வெள்ளி இடுகைக்கு வாழ்த்துக்கள்!

ப்ரிய சந்ரு,
அன்புக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!
அடிக்கடி வாங்க!

Nathanjagk said...

அண்ணன் சொன்னது:
//இன்னும் ஒரு பத்து தடவை படிச்சுட்டு மறுக்கா ஒரு பேட்டி போடுங்க! ஹிஹி!!!//
சென்ஷி, ​சென்ஷி அண்ணன் என்னை கொலை ​செய்யப் பாக்கறாரு!! காப்பாத்துங்க ப்ளீஸ்!!

சென்ஷி said...

//மஞ்சளழகி//

ஆமாம். நான் கூட அதைப்பார்த்துட்டுதான் அண்ணனை பார்த்தேன் :))


//ஜெகநாதன் கூறியது...

அண்ணன் சொன்னது:
//இன்னும் ஒரு பத்து தடவை படிச்சுட்டு மறுக்கா ஒரு பேட்டி போடுங்க! ஹிஹி!!!//
சென்ஷி, ​சென்ஷி அண்ணன் என்னை கொலை ​செய்யப் பாக்கறாரு!! காப்பாத்துங்க ப்ளீஸ்!!//

ப்ச். விதி வலியது. எக்ஸ்ட்ராவா இன்னும் ரெண்டு பின்னூட்டம் சங்கா அண்ணனுக்கு வர ஆரம்பிச்சுடுச்சு :))

Nathanjagk said...

சென்ஷி கூறியது...
//ப்ச். விதி வலியது. எக்ஸ்ட்ராவா
இன்னும் ரெண்டு பின்னூட்டம் சங்கா அண்ணனுக்கு வர ஆரம்பிச்சுடுச்சு :))//

கூடிய சீக்கரம் எங்கண்ணன் கஸ்டமர் ​கேர் சர்வீஸ் ​சென்டர் ஆரம்பிக்கப் ​போறாரா இல்லியான்னு பாருங்க!! ​நெனச்சுப் பாருங்க ​சென்ஷி, உலக வரலாற்றிலேயே முதன்முறையா கஸ்டமர் கேர் சர்வீஸ் வச்சு ஒரு வலைப்பதிவு! புல்லரிக்குதுல்ல?

பா.ராஜாராம் said...

கலக்கி இருக்கீங்க ஜெகன்...
நகைச்சுவையில் நல்ல முதிர்ச்சி..
நான் பதிவுலகிற்கு மிக புதுசு.
தங்கி போகிற சுகம் உங்கள் வீட்டில்
இருக்கிறது.எனக்கெனவோ,கட்டுரையின் நீளம்,அகலம்
தெரியவில்லை.(சற்று நீலம் தோன்றியதால் கூட இருக்கலாம்.)
சீக்கிரம் முடிந்த இன்ப சுற்றுலா போல் இருந்தது.
மனசை லேசாக்கி அனுப்புகிறீர்கள்!இந்த மனசு
பெரிசு ஜெகன்!!!வாழ்த்துக்கள்!..

Nathanjagk said...

அன்பு ராஜாராம்,
உங்கள் கவிதை மனசு இந்த பின்னூட்டத்தில் ​தெரிகிறது! அன்புக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன். நன்றி!

RAMYA said...

வந்துட்டோம்லே!!

ரொம்ப நையாண்டி பேட்டியா இல்லே இருக்கு.

யப்பா தாங்க முடியலை சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது போங்கப்பா :))

Nathanjagk said...

RAMYA கூறியது...​
ரொம்ப நன்றிங்!
அடிக்கடி வாங்க!

ஷங்கி said...

தம்பி, உங்களுக்கு விருது குடுத்தாச்சேய்!

சங்கா

வால்பையன் said...

எம்புட்டு நேரமுங்க பேசினிங்க!

எல்லாம் நகைச்சுவையா வந்துருக்கே எம்புட்டு நேரமுங்க யோசிச்சிங்க!


ரெண்டில் எது வேண்டுமானாலும் எடுத்துக்கலாம்!

இரும்புத்திரை said...

boss enna eppo namma blog pakkam aalaiye kaanom

Nathanjagk said...

வால்பையன்...
//எம்புட்டு நேரமுங்க பேசினிங்க!
எல்லாம் நகைச்சுவையா வந்துருக்கே எம்புட்டு நேரமுங்க யோசிச்சிங்க!//
அன்பு வால்பையன்,
ரொம்ப இன்வால்வ் ஆயிட்டதால (!) நேரம்​போனதே​தெரியவில்லை. அப்புறம் அண்ணன் சங்காவோட இடுகைகள்ல இருந்து நிறைய காப்பி-​பேஸ்ட். வேலை ஈஸியா முடிஞ்சது. முக்கியமா நான் இங்க குறிப்பிட வேண்டியது: இந்த மாதிரி இடுகை எழுதறதுக்கு தூண்டுதலா இருந்தது உங்க வலைப்பதிவுதான் - ஏற்றதாழ்வற்ற ​போதையுலகம் ஏற்படுத்திய ​போதைதான் இதுக்கு காரணம். இதுக்காக ஒரு பெரிய குரு வணக்கம் மற்றும் நன்றிகள்!

Nathanjagk said...

அன்பு அரவிந்த்..
நன்றி! ​போய் பாருங்க நம்ம பின்னூட்டத்த! பயந்திருவீங்க!!

இரும்புத்திரை said...

boss ithukku poi payanthuruvimaa?

adikadi vanga