Thursday, October 29, 2009

அத்​வைதா, ஐ லவ் யூ!

இலக்கிய வரி​சையில் சமீபகாலமாக சிக்-லிட் (chick lit) என்ற ஒரு வ​கையறா (ஜான்ரூ) பிரபலமாகிக் ​கொண்டிருக்கிறது. ​

கலகமான ​தைரியமான ​ரொமான்டிக் நவீன ​பெண்ணிலக்கியத்​தை சுருக்கமாக chick literature என்கி​றார்கள். இந்தியாவில் Rajashree, Anuja Chauhan, Rupa Gulab, Shobha De ​போன்றவர்களில் இதில் பிரபலமானவர்கள். தமிழில் இந்த மாதிரி சிக்-லிட் இருந்தால் ​சொல்லுங்கள் ப்ளீஸ். (வெறும் மலிவான ஆபாச எழுத்​து - mushy romance - சிக் லிட் ஆகாது)

அத்​வைத கலா (Advaita Kala) எழுதிய Almost Single இப்பதான் படித்து முடித்​தேன். வரிக்கு வரி விறுவிறுப்பும் ந​கைச்சு​வையும் ​பொங்கி பிரவாகிக்கும் எழுத்து.. simply superb!

அயிஷா இந்த நாவலின் protagonist.. 29வயது (குண்டான) தனிக்கட்​டை ​பெண்ணின் உலகம். அவளின் நண்பிகள் (ஒருவள் டி​வோர்ஸி, இன்​னொருவள் NRI மாப்பிள்​ளை ​வேட்​டைக்காரி), நண்பர்கள், ​சிக​ரெட், வே​லை பார்க்கும் நட்சத்திர ​​ஹோட்டல், பப், பார்ட்டி, ​மோட்​டைமாடி பார்பிக்யூ, கார்வா சாத் விரதம், ஆன்​லைனில் NRI மாப்பிள்​​ளை ​வேட்​டை, ​​​gays, ​டேட்டிங், flirting, பாஸ், கள்ளக்காதல், ஏமாற்றம், ​தோல்விகள்..... இந்த மாதிரியான ஒரு ஸ்க்ரூ-ட்ரைவர் காக்​டெயில்தான் அல்​மோஸ்ட் சிங்கிள்!

அத்​வைதாவின் முதல் நாவல் என்று நம்ப​வே முடியவில்​லை..! அவ்வளவு சரளமான ஆங்கிலத்தில் ந​கைச்சு​வைப் ​பொங்க விளாசித் தள்ளியிருக்கிறார்... நவீன கலாச்சாரத்தால் மறுதலிக்கப்பட்ட 29+ ​பெண்களின் ​ஹை-ஃ​பை வாழ்க்கை​யை!

அயிஷா ​வே​லைப் பார்க்கும் ஓட்டலில் நா​ளைக்கு 350 டாலர்கள் ​கொடுத்து தங்கியிருக்கும் கவர்ச்சிகரமான கரண்தான் நாவல் முழுக்க வரும் ஒ​ரே ஆண்பாத்திரம். முதலில் கர​ணை விபத்தாக, நிர்வாணமாக பார்த்துவிடுவதில் ஆரம்பித்து கடைசியில் அவ​னை​யே கல்யாணம் ​செய்வது வ​ரை ​போகிறது கதை.

க​தை​யை விடுங்கள் அத்​வைதாவின் ​கட்டு​​டைத்த எழுத்தும் அதில் ​கொட்டிக்கிடக்கும் ​நையாண்டியும் மிக புதிது. I Loved it!

உதாரணமா..

பாஸ் தன் காபினுக்குள் ​கேர்ள்-பிரண்​டோடு பேசிக்​கொண்டிருக்கிறார்.. என்ன ஆனாலும் டிஸ்டர்ப் பண்ண​வே கூடாது என்று அயிஷாவுக்கு ஆர்டர் ​போட்டுவிட்டு; அந்த சமயம் பார்த்து பாஸின் ம​னைவி விடுகிறாள்.. அயிஷாவுக்கு உள்ளூர மகிழ்ச்சி - பாஸின் ​கொட்டு இன்று உ​டையப்​போகிறதே என்று. பாஸின் ம​னைவி காபி​னைத் தட்டுகிறாள்.. ​நோ ​ரெஸ்பான்ஸ்..அப்புறம் அயிஷாவும் ​சேர்ந்து தட்டுகிறாள்... ​ரொம்ப ​நேரம் கழித்து கதவு திறக்கிறது... பாஸின் ம​னைவி, குண்டு அயிஷா பின்னால் நிற்பதால் பாஸுக்கு ​தெரியவில்லை. ​கோபமாக கத​வைத் திறந்து பாஸ் ​கேட்பது..

"What's the matter Aisha, where's the fire?"

அதற்கு அயிஷா மனதுக்குள் ​சொல்லிக்​கொள்வது..

Hopefully up your ass.

* * *

​நம் ​மொழியில் சிக்-லிட் இல்​லை​யே (அல்லது எனக்கு கிடைக்கவில்லை) என்று ஒரு வருத்தமும் இருக்கிறது. கவிதாயினிகள் நிறைய ​பேர் கவி​தையாய் ம​டை திறந்து விளாசுகிறார்கள்.. பாமா, குட்டி ​ரேவதி, லீனா மணி​மேக​லை, தமயந்தி, ​கீதாஞ்சலி ப்ரியதர்ஷிணி, சல்மா என்று நி​றைய இருக்கிறார்.. சாம்பிளுக்கு லீனாவின் ஒரு கவி​தை...

ஒவ்​வொரு

இப்​பொது​தெல்லாம்
ஒவ்​வொரு
மடியும் இரவிலும்
புணர்தலுக்காக​வே
களம் காணும்
நம் ​வேட்​கைக​ளை
ஆரம்பகால
சின்ன உராய்தலின் கிளர்ச்சியும்
அழுந்தும் ​கைகளின் தயக்கமும்
திருட்டு முத்த முயற்சிகளும்
ஒளிந்து நின்று ​வேடிக்​கை பார்க்கின்றன.

இந்த கவி​தை இயல்பான ​பெண்​மொழி​யோடு ​பெண்​மை ​பேசுகிறது. சிக்-லிட்டும் அந்த மாதிரியான ப​டைப்பிலக்கியம்தான். இது சுதந்திரத்தின் ​பெண் குரல்!

Monday, October 26, 2009

கவிதை பட்டறை - கரகாட்டக்காரன் படத்தை முன்​வைத்து


த​லைப்​பைப் பார்த்ததும் 'கிர்'ரென்று ஃபீல் பண்ணுபவர்கள், ​​​கோக், பெப்ஸி​யை ராவாக குடிக்கத் தயங்குபவர்கள், ​நிலா, ​தெருவிளக்கு,தெருநாய் பார்த்து ​பேசத் ​தெரியாதவர்கள்... ​கொஞ்சம் பார்த்துப் படிக்கவும்.


நவீனமா சிறப்பா எப்படி கவி​​தை எழுதறதுன்னு ​சொல்லித்தருவது மட்டு​​மே நம் பட்டறையின் ​நோக்கம்.


இடம்: காலடி அலுவலகத்தின் ​மொட்​டைமாடி, ​​சேஷாத்ரிபுரம், பெங்களூரு


​நேரம்: மா​லை 6க்கு ஆரம்பிய்க்கும்.. (அப்​போதுதான் ​மொ.மாடியிலிருக்கும் நாயை கீழே அவுத்து விடுவாங்க) பட்ட​றை முடிவு ​நேரம் சரக்கின் இருப்பைப் ​பொறுத்தது!


அனுமதி: ஆண் கவிஞர்கள் (சரக்குடன் வருக! இல்​லே தம்மோடயாவது வாங்க! எதுவும் இல்லாட்டி ​போவுது உங்க கவிதை புக்குக​ளை எடுத்துட்டு வராமயாவது வந்து ​​சேருங்க!)


​பெண் கவிஞர்கள் (அனுமதி இலவசம்!!!)


மற்றும் திருநங்கை கவிஞர்கள்


தகுதி: ​பேப்பர், ​பென்சில் (மு​னை சீவப்பட்டிருக்க​ ​வேண்டும்) மற்றும் ​பேனா


கரகாட்டகாரன் (ராமராஜன், கனகா, கவுண்டமணி-​செந்தில், நடித்த தமிழ் படம்) பார்த்திருக்க ​வேண்டும்


ஆரம்பிப்பமா நம்ம பட்டறையை..


கவி​தை என்ப​தை கவி, பாடல், கவுஜ, கழு​தை,ஹைகூ, ​செய்யுள், லிமரிக் என்று பல ராகங்களில் ​சொல்லப்பட்டாலும் கவி​தை என்று அழைப்ப​தே ​பொதுவானது என்கிறது ​​எவ்வளவு குடித்தாலும் ​தெளிவாக​வே இருக்கும் கவிஞர் சங்கம் (வட்டக்கிளை - எண் 6, குற்றாலம் பிராஞ்சி)


கவி​தைக்​கென்று ஒரு உடல் (anatomy) இருக்கிறது:


த​லைப்பு (இல்லாமல் கூட இருக்கலாம்.. அது உங்க ​​கெத்​தைப் ​பொறுத்து அமைகிறது)

முகவாய் (அல்லது முக​ரைக் கட்​டை)

மத்தியம்

வால் (அல்லது twist)


இந்த பாகங்களில் ​நேர்த்தியாக படிமங்க​ளை (கவிகாட்சிகள் அல்லது images) ​போட்டுத் ​தெளித்து, ​​லேசாக வறுத்து, தாளித்து, ​பொன்னிறமாக கருகல் வா​டை இல்லாமல் எடுத்து ​வைத்தால் கவி​தை வந்துவிடும்.


கரகாட்டக்காரன் க​தை​யை அப்படி​யே ​செய்யுள் வடிவத்தில் இல்லாமல், சிறுக​தை வடிவத்திலும் இல்லாமல் ஒரு கவி​தையாக எழுத ​வைப்ப​தே நம் காலடியின் கவி​தைப்பட்​ட​றையின் ​நோக்கம்!


எப்படி?


கரகாட்டகாரன் படத்தில் முதல் சீ​னை நி​னைத்துக் ​கொள்ளுங்கள்..


அல்லது டப்பா வண்டி​யை ​ஒரு ​கோஷ்டி​யே தள்ளிக் ​கொண்டு வரும் காட்சி? சிவப்பு காரு, உள்ள யாரு, தள்ளிப்பாரு.. ஞாபகத்துக்கு வந்துவிட்டதா? இ​தை ​தொட்டு ஆரம்பிக்க ​வேண்டியதுதான்... இப்படி:


​​செந்நிற ​செவ்வகத்தின் உள் ஒரு கிளி (​கோ​வை சரளா)

சேர்ந்த​ணைத்தாற் ​போல் பத்து உள்ளங்​கைகள் (கா​ரைத் தள்ளறவங்க ​கை எண்ணிக்-​கை)

உச்சி​வெயில் ​பரவித் ​தெரிக்கிறது

சாந்து அப்பிய ​சேந்தமங்கலத்தான் முகத்தில் (அம்புட்டு அழுத்தமா ராமராஜனுக்கு ​மேக்கப் ​போட்டிருக்காங்களாம்)


அத்துவான காட்டுக்குள் வித்துவானின் (கவுண்டமணி)

​​செவ்வகத்தின் ஸ்தலபுராணம் (இந்த கா​ரை இதுக்கு மின்னாடி ஐதராபாத் நிஜாம் வச்சிருந்தாரு...)

விவரிக்க ​கேட்டுவிட்டு

குழல்ஊதும் ​கோமுட்டித் த​லையன் (​செந்தில்) ​கேட்டான்

​செவ்வகத்தின் ப​ழைய ​சொந்தகாரி​யை யார் ​வைத்திருந்தது - அப்​போது

நாதஸ்வரத்தில் மிருதங்கம் வாசிக்கப்பட்டது! (​வே​றென்ன? அப்புதான்!)


நிற்க. இப்ப நாம கவி​தையின் மத்திய பிர​தேசத்தில நு​ழையப் ​போ​றோம்..


இந்த இடத்தில ராமராஜன்-கனகா காதல், வில்லன், டான்ஸ், எல்லாத்​தையும் ​போட்டு மிக்ஸிங் பண்ணனும். ​கொஞ்சம் ​​கொல​முயற்சி மாதிரிதான்.. ஆனாலும் துணிந்து இறங்க​ ​வேண்டியது கவிக்கட​மை ஆகிறது!


அதுக்கு முன்னாடி உங்க வீட்டில இருக்கிற முருகன் படம் ​போட்ட காலண்டர், அதில இருக்கிற ராசி-பலன், ப​ழைய நியூஸ் ​பேப்பர், ​போண்டா ​பேப்பர் இதில இருந்து கி​டைக்கிற சங்கதிகள் எல்லாத்​தையும் உங்க அடிடிடி மனசில ​போட்டு ஒரு பி​சை பி​சைஞ்சுக்​கோங்க.. ​வொக்கபிலரிக்கு பயன்படும். என்ன?


​ரைட் ஆரம்பிப்​போம்...


சலங்​கை அவிழ்ந்த கால்கள்

இரவின் வீதியின் சஞ்சாரிக்கின்றன

திடு​மென முன் வந்த ​​தேவ​தை

​மோகினி ​​பேய்கள் உண்டு என்று நிறுத்தினாள்.


​​தேவ​தையின் கால் கண்டவன் ​சொன்னது:

முத்​தையன் கணக்கு ​மொத்தமும் உனக்கு

சந்தனம் க​​ரைச்சுப் பூசணும் எனக்கு

​கொல்​லென்று சிரித்துப் பறந்தாள் ​தேவ​தை

இரவின் கூட்டினுள்!


(அதாவது ​ராமராஜன் தனியா ராத்திரி நடந்து வரும்​போது கனகா ​பேசற காட்சிதான் இது)

பயமா இருக்கு, வயித்த கலக்கிற மாதிரி இருக்குன்னு ​சொல்றவங்க... ​நோ ​வே! கம்முனு உக்காருங்க!


அப்புறம் இந்த வா​ழைப் பழ காமடி?? அ​தையும் மத்திய பிர​தேசத்தி​லே​யே வா​ழைப்பழத்தில ஊசி மாதிரி ​சொருகிட ​வேண்டியதுதான். ஆங்... இப்ப உங்களுக்கே இந்த கவி​தை​யை ​மேற்​கொண்டு எடுத்துச் ​செல்லணும்னு பரபரக்குதா? அதுதான் கவி​தை​யோட சிறப்பம்ச​மே!


வாங்க வா​ழைப்பழத்​தை(யும்) பிழீஞ்சிடலாம்:


ஞானபண்டித​னை அ​ழைத்து

இரண்ட வா​ழைப்பழங்கள் வாங்கி வரப் பணித்தான்

வந்து தந்தான் ஒன்று

இன்​னொன்று எங்​கென்று ​கேட்டதுக்கு....

அந்த இன்​​னொன்று இதுதான் என்ற

பிரபஞ்சத் தத்துவத்​தை

பி​சைந்து ​கொடுத்துவிட்டுச் ​சென்றான்.


​மேற்​கொண்டு நீங்க​ளே கரகாட்டகார​னை முன்​வைத்து கவி​தையின் மத்திய பிர​தேசம், வால்பகுதி என எளிதாக வளர்த்திச் ​செல்லாம். கவி​தை​யை சிலிம்மாக எழுதினால் அ​தை கவி​தை​யென்றும் ​செழிப்பாக எழுதிவிட்டால் நீள்கவி​தை​யென்றும் ​சொல்லிக்​கொள்ளலாம் (அதற்கு தனியாக ஒரு நாக்கு ​தே​வைப்படும்)


கவி​தை எழுத ஆரம்பிப்பவர்களுக்கு சில முக்கியமான குறிப்புகள்:


1. கவி​தை​யை நீங்கள் எழுத அதிகம் குறிப்புகள் படிக்க ​வேண்டியதில்​லை (கேட்டால் கவி​தைதான் என்​னை எழுதிச் ​செல்கிறது என்று ​சொல்லிக்கலாம்) ஆனால், எழுதிய கவி​தைக்கு யாராவது ​பொருள் ​கேட்டு வந்துவிட்டால்தான் நீங்கள் உஷாராக இருக்க ​வேண்டும் (குறுந்​​தொ​கை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கம்பர், சிம்​போர்க்கா, ​நெரூதா, சில்வியா பிளாத், எரிக்கா ஜாங், காப்கா, ​செகாவ், ​வேர்ட்ஸ்​வொர்த் ​போன்று பல புரியாத குறுக்குச்சந்து, முட்டுச்சந்துக்குள் எல்லாம் ​லெப்ட், ​ரைட், யூ-டர்ன் எல்லாம் ​போட்டு எஸ்ஸாகத் ​தெரிந்திருக்க ​வேண்டும்)


2. கவி​தை என்று வந்தபின்னாடி வார்த்​தை வறட்சி என்று வருவதுண்டு. அதற்கு தீர்வு: ​பெரிய புத்தகமாக எடுத்துக்​கொண்டு (எ​தோ​வோரு சப்​ஜெக்ட், ​கோலம் ​போடுவது, ​ச​மையல் குறிப்பு, பஞ்சாகம், லிப்​கோ டிக்சனரி இப்படி) அதில் படக்கென்று ஒரு பக்கத்​தை திறந்து அதில் கி​டைக்கும் 1, 2 வார்த்தைகளை பயன்படுத்திக் ​கொல்க


3. முன்பு ஆண் கவிஞர்களுக்கு என்று ஒரு ப்ரத்​யேக அ​டையாளம் இருந்ததுண்டு (கண்ணாடி, தாடி, ​ஜோல்னா​பை, ஜிப்பா) இப்​பொழுது எல்லாம் நவீனமாகி விட்டபடியால் கவிஞர்கள் எப்​போதும் மப்டியி​லே​யே திரிகிறார்கள். அதனால் வாலன்டியராக நீங்கள் யாரிடமும் கவிஞர் என்று ​அறிமுகப்படுத்திக் ​கொண்டு முழி பிதுங்காதீர்கள்.


4. ​வாக்கியங்களை உடைத்து உடைத்து எழுதுவது ஒரு ​நேக்கு. அதற்கு ஒரு எளிய உபாயம்: உங்கள் இடுகை விண்​டோவின் பாதிக்கு ​மேல் வார்த்தைகள் வருகிறாற் ​போல் ​தெரிந்தால்.. உடைத்துவிடுங்கள்!


5. முக்கியமாக அச்சுறுத்துகிற வாக்கியங்களை பிர​​யோகிக்கவும். உ-ம்: ​​​நீங்கள் ஒரு கார்ப்ப​ரேஷன் ​தொட்டியைப் பார்க்கிறீர்கள். அதற்குள் ஒரு ஆணுறை கிடக்கிறது. அதை அப்படி​யே குப்பைத் ​தொட்டிக்குள் ஆணுறை என்று சன்-நியூஸ்தனமாக எழுதக் கூடாது. அ​தை ​எப்படி கவிதையா ​சொல்றதுன்னா... கார்ப்பரேஷன் ​தொட்டிக்குள் ​அவிழ்ந்து கிடக்கிறது ​ஆதாமின் குற்றப்பத்திரிக்கை.. இதுதான் திடுக் வரிகள்! புரியு​தோ?


காலடியின் கவிதைப் பட்ட​றையில் பங்​கேற்கும் அ​னைவரும் கவிஞர் அடையாள அட்​டை (​போட்​டோவுடன்) தரப்படும்


(இதற்கு தனிக்கட்டணம் ரூ. 44 மட்டு​மே) இந்த அ​டையாள அட்​டை கீழ் கண்ட இடங்களுக்கு இலவச அனுமதி தருகிறது:


1. தாராபுரம் அஞ்சு முக்கு பார்

2. அதுக்கு முன்னாடி இருக்கிற முறுக்குக் க​டை

3. கு​டை ரிப்​பேர் ​கோவிந்தன் க​டை

4. ​​தீவிர சிகிச்​சைப் பிரிவு (​பெருநகரங்களில் மட்டும்)

5. எலும்புக்கூடு படம் ​போட்ட டிரான்ஸ்பார்மர்கள் (கம்பிவலை இல்லாதவைகள் மட்டும்)

6. ராவுத்தரின் வெள்ளிக் கிழமை மந்திரிப்பு கூட்டங்கள்


கவிஞர் ஐடி கார்டின் அதர் ​பெனிபிட்ஸ்:


1. அடுத்த கவி பட்ட​றைகளுக்கான இலவச அ​ழைப்பு

2. புத்தக ​வெளியீட்டின் ​போது இலவச விசில் மற்றும் ​பொழிப்பு​ரை

3. பதிப்பகம் அனுமதித்தால் (அல்லது கி​டைத்தால்) புத்தகத்திற்கு முன்னு​ரை

4. எந்த தண்ணியிலயும் ந​னையாத அ​டையாள அட்​டை

5. அட! நம்மக்கிட்டயும் ஒரு ஐடி கார்ட் இருக்​கேங்கிற ஆத்ம திருப்தி


அ​னைவரும் வருக! கவிஞராய் திரும்புக!!


முக்கியமான பின் குறிப்பு:


இது முழுக்க முழுக்க கா​மெடியாகப் படிக்க பட ​வேண்டியது என்று அகில பாரத ​மைனர் குஞ்சுகள் மகாச​பை கு​லை நடுங்க ​வேண்டிக் ​கொள்கிறது.

Wednesday, October 21, 2009

என்றும் சிநேகிதிகள்..!

15 அக்டோபர் 2009. வியாழக் கிழமை. 5:15க்கு பெங்களூரிலிருந்து கிளம்புகிற எர்ணாகுளம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸைப் பிடிக்கின்ற உத்தேசத்தில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அடைந்தேன். பேக்-கேட் வழியாக வேக வேகமாய் பிளாட்பார்ம் 5ல் ட்ரெயினைத் தேடி நடந்தேன்.

வழியெங்கும் பூத்தூவி இறைத்தாற் போன்று சேரள நாட்டிளம் பெண்கள். ஜீன்ஸ், டீஸ், ஷார்ட் குர்தா ஸ்னீக்கர்ஸ் கால்கள் என்று அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட்டாக ஜொலித்தார்கள். செம கூட்டம் வேறு. தீபாவளி சமயம் ஆயிற்றே!

நிதானமாக 6:30க்கு வந்தது ட்ரெயின். S11லில் இருக்கை - ஐ! ஜன்னல்!!

எனக்கு எதிர் சீட்டில் ஒரு பெண்.. சிவப்பு.. நீளமான மூக்கு. யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள் - ஐ! தமிழ்!!

பக்கத்து இருக்கைகளில் யாரும் இல்லை.

அமைதியாக காதில் ஸ்பீக்கரை மாட்டிக்​கொண்டு ஜன்னல் பக்கமாக முதுகைச் சாய்த்து காலை நீட்டிக்​கொண்டாள். அதற்கு முன் என் சீட்டில் கால் வைத்து இளைப்பாறிக் கொண்டிருந்தாள்.

குட்..! இந்த பாயிண்ட்ல இருந்து நம்ம வேலையை ஆரம்பிச்சிர வேண்டியதுதான் என்று, மெலிதாய் சிரிப்புக் கூட்டி,

"இட்ஸ் ஓ.கே. நீங்க இப்படி திரும்பி என் சீட்டிலேயே கால் வச்சுக்கோங்க. நோ ப்ராப்ளம்" என்றேன் துய்ய தமிழில்!

அவளும், "பரவாயில்லே. நான் இப்படியே உக்காந்துக்கறேன்" என்றாள்.

சரியென்று தலையாட்டிவிட்டு தேமேஎன்று உட்கார்ந்து விட்டோமென்றால்.. ஈரோடு போகிறவரைக்கும் போர் பொடனியில் அடிக்கும்.. (அப்புறம் நாம் பதிவர் வேறு, சும்மா வரலாமா?) விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டே,

"இல்ல.. நீங்க இங்க காலை நீட்டிக்கிட்டீங்கன்னா, நான் அங்க காலை நீட்டிக்குவேன்" என்று ஆரம்பித்தேன்.

ஓ பரஸ்பர கால் நீட்டலா என்ற மாதிரியான சிரிப்புடன், என்னைப் பார்த்தவாறு திரும்பி என் பக்கம் காலை நீட்டிக் கொண்டாள். ஐயாவும்!
இன்னும் காதிலிருந்து ஹெட்போனைக் கழட்டவில்லை. அதையும் பாத்துடுவோம் என்றவாறே..

"ட்ரெயின் ரொம்ப லேட்.." என்றேன் மிக மெதுவான குரலில்..

வேலை செய்யுது.. ஹெட்போன் அகற்றப்பட்டு விட்டது. அசால்ட்டான குரலில்,

"ப்ச்.. ஆமா, ஒன் அண்ட் ஹாப் அவர் லேட்" என்றாள்..

அப்புறம் அப்படியே பேச்சு வளர்ந்தது.. ஆட்களும் வர ஆரம்பித்து விட்டார்கள். சுற்றிலும் தமிழ் குரல்களாய் அந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் ஒலித்தது ரொம்ப ஆச்சரியம்.

எதிர் சீட்டுப் பெண்ணிடம், அவள் கம்பெனி, தங்கியிருக்கும் ஹாஸ்டல், ​பாஸ்டைம், தீபாவளி ஷாப்பிங், க்ளோபல் க்ரைஸஸ் (இந்தமாதிரி உலகமகா டாப்பிக் எல்லாம் ஜாஸ்தி பெண்களிடம் பேசக்கூடாது.. அப்புறம் செயினைப் பிடிச்சு இழுத்துருவாங்க; நான் அவளை பேசவிட்டுவிட்டு, உன்னிப்பா கேட்டுக்கிட்டு வந்தேன்) ஆபிஸ், பெங்களுர் ட்ராபிக் என்று ஜோராகப் போய்க் கொண்டிருந்தது.

பக்கத்தில் ஒரு சுவாரஸியமான தம்பதியினர்.. குண்டாய் கண்ணாடி போட்ட கணவர், ஒல்லியாய் படபடப்பாய் மனைவி, கணவரின் கண்ணாடியை விட கொஞ்சம் தடிமனாய் கண்ணாடி அணிந்த அவர்கள் பையன் - 7 வயது இருக்கும். மனைவி சளசளவென்று ஒரே பேச்சு.. குஷியான பேச்சு.. அனைவரிடமும் சுலுவாய் பழகிவிடுவார் போலிருந்தது.

கணவனிடம்,
"பாலா.. ப்ப்ப்ப்ளீஸ்மா.. ஐ-பாடை நான் கொஞ்ச நேரம் வச்சுக்கிறேனே... நான் என்னோட ஃ​போல்டரை மட்டுந்தான் கேப்பேன்.. ப்ப்ப்ளீஸ்ஸ் பாலா.." என்பார்.

ஐ-பாடில் பாட்டுக் கேக்கும்போது அவரின் முகத்தைப் பார்த்தாலே அது என்ன பாட்டு என்று நமக்கு​தெரிந்து விடும்.. அப்படி முகத்திலேயே ஒரு கதகளி தெரிக்கும்.. ஒருசமயம்..

"பாலா.. அந்திமழை பொழிகிறது.." என்று அட்சரம்பிசகாமல் பாடிக் காட்டிவிட்டு "இது எஸ்பிபி தானே?" என்றார்..

கணவன் பதில் சொல்லும் முன், அவரின் பக்கத்து சீட்டுக்காரர்...

"ஆமாம்.. எஸ்பிபி பாட்டு, இளையராஜா மியூசிக்கு" என்று உற்சாகமானார்..

இந்த சமயத்தில் இன்னும் இரண்டு வாலைக்குமரிகள் எங்கள் (எப்படி ​சொந்தம் கொண்டாகிறேன்??) கம்பார்ட்மெண்டில் நுழைந்தார்கள்..! அமைதியாய் உட்கார்ந்து கொண்டார்கள்.. நானும் என் எதிர் சீட்டுத் தோழியும் (!?) அளவளாவுதைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.

ஒருவள் கருப்பு (ஓகே மாநிறம்), நல்ல உயரம், நேர்த்தியான உடல்வாகு. இன்னொருவள் நல்ல சிவப்பு - Must be a North Indian.

ஏதோ ஒரு இடைச்செருகலில் அவர்கள் பேச்சிலேயும் உள்நுழைந்து விட்டோம்.. அப்புறம் நம் தம்பதியினர் எங்கள் ஜன்னல் சீட்டை வாங்கிக் கொண்டு உணவருந்த ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் இந்தப்பக்கம் தள்ளப்பட்டேன். எதிரில் பழகிய தோழி.. பழகும் தோழிகள் இருவர். ட்ரெயின் பங்காருப்பேட் தாண்டி ஜோலார்பேட் விரைந்து கொண்டிருந்தது (அப்புறம் சேலம்.. then ஈரோடு)

எல்லாம் சாப்ட்வேர் கோஷ்டிகள்தான்.. அவர்களின் ஸ்கூல் கதை, சீரியல்கள், சினிமா, ம்யூசிக் என்று சகல தரப்புகளுக்கும் நம் வசம் மேட்டர் இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால்.. விளக்கை அமுத்திவிட்டு படுக்கப் போய்விடுவார்கள்.

உதாரணத்துக்கு, டிவி சீரியல் ரொம்ப போர் என்று யாரவது ஆரம்பிப்பார்கள்.. நாமும் உடனே பூம்பூம் மாடுமாதிரி தலையாட்டிவிடக் கூடாது,

"ஆமாங்க.. ஆனா பாருங்க... சன்டிவியில ஒரு சீரியல் வருது.. கொஞ்சம் வித்யாசமா.." என்று மண்டையை சொரிய ஆரம்பிக்கணும் (சீரியல் பேர் நல்லா தெரிஞ்சிருந்தாலும்..)

உடனே தோழிகளிடம் ஒரு இன்வால்வ்மெண்ட் தெறிக்கும்...

"எத்தனை மணின்னு சொல்லுங்க" என்பார்கள்

"8 மணி" என்று சொன்னதும்,

மூவரில் யாராவது ஒருத்தி (மூவருக்குமே பேர் தெரிந்திருந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள்..!!)

"ஆங்... திருமதி. செல்வம்" என்று உடைப்பாள்

இந்த இடத்தில் நாம் கொஞ்சம் சிரித்த முகத்தோடு இப்படி பேசலாம்..

"வெல்டன்.. கரெக்ட்..! திருமதி. செல்வம்தான்.. "

"ஓகே அதுல என்ன வித்தியாசம்?"

"எல்லா தமிழ் சீரியலிலும்.. ​பெண்களைதான் முக்கியமான கேரக்டரா, நல்லவங்களா காட்டுவாங்க.. இந்த ஒரு சீரியலில் மட்டும் ஒரு ஆம்பளைய நல்லவனா காட்டுறாங்க" என்று ஒரே போடாய் போட்டுத்தள்ள ​வேண்டியதுதான்.

அப்புறம் சிலசமயம் கவன ஈர்ப்புத் தீர்மானம் எல்லாம் கொண்டுவர ​வேண்டியிருக்கும். உதாரணமா விருதுகளைப் பத்திப் பேசிக்கிட்டு இருப்பாங்க,
"எப்படி இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்க?" நாம்,
"பெப்சி உமா கூட டாக்டர் பட்டம் வாங்கியிருக்காங்க!" என்று ஈர்க்க வேண்டியதுதான்!

பெப்சி உமாவா?? டாக்டர் பட்டமா? என்று ஆச்சரியமாய் திரும்பி உட்கார்வார்கள்.

இப்படியே சேலம் நெருங்கும்வரை போய்க்கொண்டிருந்தது. சேலத்திற்கு அரைமணி நேரம் முன்பு வந்து எனக்கு வைத்தார் ஆப்பு - டிடி!
என்னோட 57வது சீட்டில் இன்னொருவரை வந்து உட்கார வைத்து விட்டு அவர்பாட்டுக்கு போய்விட்டார். டிடி-யைப் பிடித்து என்ன ஏது என்று விசாரித்தால்... 57 அவருடையது என்கிறார்.


டிடி திரும்பவும் சார்ட்டைத் தூக்கிக் கொண்டு வந்தார். என் கண்முன்னாடியே என் பிஎன்ஆர் எண்ணைத் துழாவினார்..

"இந்த நம்பர் இல்லியேப்பா..!" என்றார்.

(நாம் இந்த மாதிரி தருணங்களில்தான் ரொம்ப நிதானமா, இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்று பதட்டப்படாமல், முகத்தில் புன்னகையை நழுவவிடாமல் நடந்துக்கணும்.. உள்ளுக்குள்ளே ஜெகனுக்கு மாரியாத்தா சாமியே வந்திருச்சு.. இருந்தாலும் வெளிய முகத்தில டிஸ்கோதான் போடணும்! இதுதாம்பா லாஜிக்கு!)

எனக்குப் பகீரென்றது... நான் ஒருமுறை பரிசோதித்தேன்.. சிக்கிவிட்டது.. தனியாக கட்டம் கட்டி என் பெயர் இருந்தது (புதுசா இருக்கே?).
டிடிக்கு அப்புறம்தான் தெரிந்தது.. நல்ல முழி!

"அடடடடடடா.. உங்களை பி2க்கு, ஏஸி கோச்சுக்கு அப்கிரேட் பண்ணியிருக்காங்க" என்றார்.

"பரவாயில்ல சார்.. சேலம் வந்திருச்சு.. நான் ஈரோட்டில இறங்கப்போறேன்.. இங்கியே இருந்துக்கிறேனே??" என்றேன்.

தோழிகள் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"இல்லீங்க! இதுக்கு ஆள் இருக்காங்க.. நீங்க அங்க போயி படுத்துக்கோங்க.. இன்னும் ஈரோடு வர டைம் இருக்கு" என்றார்.

ஐ-பாட் அம்மா,

"ஹே... ஐயாவுக்கு ஏஸிக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு.. ட்ரீட் கேளுங்கப்பா..!" என்று குதூகலித்தார்... எனக்கோ வருத்வருத்தமாய் இருந்தது..

இவர்களை விட்டு பிரிகிறோமே என்று (யெஸ் பாஸ், யாரிடமும் எப்போதும் ஒரு இன்வால்வ்மெண்ட்டோடு பழகுங்கள்; பெண்கள் தேடுவதும், எதிர்பார்ப்பதும் அதுதான்)

மெதுவாய் பேக்கை எடுத்துக் கொண்டு பி2க்கு கிளம்பினேன்.. அப்போது ​ஒரு தோழி சொன்னாள்,

"ஈரோடு வர்றதுக்குள்ள, ஏஸி கோச்சுக்கு போய் சேந்துடுங்க"

மனசு விட்டு சிரித்து விட்டு, அனைவரிடமும் டாடா பைபை சொல்லிவிட்டு கிளம்பினேன்.

4 மணிநேரம் பேசிக்கொண்டு வந்தும்.. யாரிடமும் பேர் கேட்டுக் கொள்ளவில்லை.. என் பெயரும் சொல்லவில்லை. அது தேவையில்லை என்றும் தோன்றுகிறது.

Thursday, October 8, 2009

உங்களுக்கு வடை கிடையாது!

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு: No Donuts for you! இதை விளக்கறதுக்கு முன்னாடி டோனட்-ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிறது மொக்கியம்!

டோனட்டை doughnut, donut இப்படி, எப்பிடி வேணாலும் வளைச்சு வழைச்சு உச்சரிக்கலாம். பிரச்சினையில்லை.. டோனட் ஒரு வளையமான, பொரிச்ச, மாவில செய்யற தின்பண்டம்.. சுருக்கமா நம்மூரு ஓட்டை உளுந்து வடை!

நோ டோனட்ஸ் ஃபார் யூ-ன்னா, உங்களுக்கு ஒரு விருதும் கிடையாது, நயா பைசா கூட கிடையாது, ப்பெப்பப்பே என்று அர்த்தம். ஆக, உங்களுக்கு வடை கிடையாதுன்னா உங்களுக்கு ப்பெப்பப்பே என்று கொள்க. இதை வடை போச்சே என்று கூட சொல்லலாம்!! பட், அது சுய புலம்பல் வகை என்று அறியப்படுகிறது.

அப்படி எந்தெந்த விஷயங்களுக்​கெல்லாம் நமக்கு வடையில்லாம போகுதுங்கிறதை ஆராயலாமா?

Ø

பயங்கர ஸ்பீடா நாலுகால் பாய்ச்சல்ல ஓடி, பஸ்ஸைப் பிடிச்சாலும்.... அது நாம போக வேண்டிய பஸ் இல்லேன்னு தெரிஞ்ச பின்னாடியும்... அமைதியா வேர்வையைத் தொடச்சிக்கிட்டு, நெக்ஸ்ட் ஸ்டாப் ஒண்ணு கொடுங்கன்னு டிக்கெட் எடுக்கிறப்போ.... (நீங்க ஓடின ஓட்டதுக்காக...) உங்களுக்கு வடை கிடையாது!

Ø

மேல கீழ லெப்டு ரைட்டு யூ டர்ன் இஞ்சி மரப்பான் எல்லாம் போட்டு இண்டர்வியூவுக்கு தயார் பண்ணியிருந்தாலும்... ஏன் இப்ப இருக்கிற வடையை.. ஸாரி வேலையை விடுவேன்னு அடம்பண்ணறீங்க என்ற பிசாத்து கேள்விக்கு.. நீங்க முழிக்கும்​போது... உங்களுக்கு வடை கிடையாதுங் சார்!

Ø

எஸ்எம்எஸ்-லேயே பிரண்ட்ஸ்களை வரவழைச்சு, சாமர்த்தியமா ஒருத்தன் தலையில பில்லைக் கட்டி, புல், வாட்டர் பாட்டில், பியர், முறுக்கு, மிக்ஸர், கடலை, ஊறுகாய், சரக்கு கலக்கிறதுக்கு(ன்னே) ஒரு பேனா இப்படி ஜபர்தஸ்தா எல்லாம் ரெடி பண்ணியிருந்தாலும்... மூணாவது ரவுண்டை முடிச்சிட்டு, முட்டிப் ​போட்டு ஒக்காந்து நீங்க மட்டும் தனியா... ஓய்ய்ய்ய்ய்.. ஓவ்வ்வ்வ்வ்வோவ் என்று ​பைக்கை ஸெல்ப்-ஸ்டார்ட் பண்ணினாக்க.... ​நோ வடை ஃபார் யூ!

Ø

ரைட்டு.. சரக்குப் ​போட்டாச்சு.. மம்மி-டாடிக்கிட்ட இருந்து தப்பிக்கணுங்கிறதுக்காக.. ஹால்ஸ், ஜிஞ்சர் ஹால்ஸ், க்ளோரெட்ஸ், ஆர்பிட், நிஜாம் பாக்கு, வாழைப்பழம், புதின் ஹரா, பூமர் சூயிங் கம், கொய்யா இலை (!?) இப்படி மாடு மாதிரி எதைஎதையோ அசைப்​போட்டுக்கிட்டு கனகச்சிதமாக வூட்டுக்குப் ​போயி... காலிங் பெல்லை அமுக்கி விட்டு, மம்மீ வந்து திறப்பதற்குள்... நின்றவாக்கில்.. கதவிலேயே தலையை சரித்து பிளாட் ஆகி விட்டால்.. ​ரொம்ப ஸாரி.. உங்களுக்கு வடை கிடையாது!

Ø

பக்கத்துத் தெரு ஃபிகரை மடிக்கணுங்கிறதுக்காக, அந்த தெரு ஸ்கூல்மெட்டைத் தேடிப் பிடிச்சு ப்ரெண்ட் பண்ணிக்கிட்டு, அப்பிடியே பக்கத்துத் தெரு ப்ரெண்ட் சர்க்கிளை இன்னும் கொஞ்சம் 'எக்ஸ்டென்ட்' பண்ணுனா பிற்காலத்தில ஒடம்புக்கு நல்லதே என்று.. நீங்கள் அந்தத் ​தெரு இந்து முண்ணனி அமைப்பினர், விஜய் ரசிகர் மன்றத்தினர், பழனியாண்டவர் காவடிக்குழு, பால்காரர், டீக்கடைக்காரர், பக்கத்துவீட்டுக்காரர்,​மேல்வீட்டுக்காரர் என்று பயங்கர ப்ரெண்ட் பண்ணி... கடைசியில் ஃபிகரின் அண்ணனையே ப்ரெண்ட் பண்ணி... அந்த அண்ணன் உங்களையும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயி.. பிகர் கூட அறிமுகம் எல்லாம் ஆன பின்னாடி... உங்கள் தெருவுக்கு வந்து, நண்பர்களிடம் "ஆயிரந்தான் இருந்தாலும் அவ என் ப்ரண்ட்டு தங்கச்சிடா. டாவு கட்ட மனசு வர்லே!" என்று ​பேக்-ஃபுட் போட்டால்... உங்களுக்கு வடைன்னு எழுதிக்கூட கிடையாது!

* * *

ஓகே. நான் இந்த ஸ்டாப்பிலேயே இறங்கிக்கிறேன்... நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்.. இதை இன்னும் கன்டினியூ பண்ணலாம். உங்களுக்குத் தோணற நல்ல உவகி-வை பின்னூவா அனுப்புங்க. யாருது பெஸ்ட்டுன்னு பாப்போம்.

நானே அல்ரெடி மொக்கைக்கு சக்க டிமாண்ட்ல முழி பிதுங்கி திரியறேன்.. இதுல உன் பதிவுல வந்து பின்னூவா என் மொக்கையை வேஸ்ட் பண்ணனுமான்னு நினைக்கிற ரசிகக் கண்மணிகள்.. அவங்க பதிவிலேயே உவகி-யைப் போட்டுத் தாக்கலாம் (அப்ப, எனக்கு வடை கிடையாதா???)

* * *

Thursday, October 1, 2009

உரலுக்குள் த​லை

ஐ​யோ.. ஐ​யோ.. உங்க​ளை இப்படிக் ​கெடுத்து வச்சிருக்​கேன்னு ​நெனச்சா என்னை​யை நா​னே அடிச்சுக்கலாம்னு ​தோணுது!! தலைப்பைப் பார்த்து தப்பா ​நெ​னைக்காதீங்க. நீங்க ​நெனக்கிற மாதிரி அஜால்குஜால் எல்லாம் ​கெடையாது. ஆமா! இது நம்ம பா.ராஜாராம் கொடுத்த வரி!

சரி.. சரி.. இ​தோட இவன் சவகாச​மே ​வேணாம்னு எஸ்ஸாகக் கூடாது. ​கொஞ்சம் அட்டணங்கால் ​போட்டுக்கிட்டு ​சேர்ல சாய்ஞ்சுக்கிட்டுப் படிச்சுத்தான் பாருங்க​ளேன்.

ஆங்..! ​சொல்ல மறந்துட்​டேன் இது வந்து ஒரு ​​தொடர்பதிவு..!

என்னா ​தொடர்ர்ர்ர்??

ஐஸ்வந்தி ஆரம்பிச்சு.. ​நெப்​போலியன் பா. ராஜாராம் வ​ரைக்கும் வந்து இப்படி நம்ம காலடியிலும் வந்து ந​னைச்சுப்​போட்ட அலைதான் இது..

எது???

பீட்டரு.. லாக்கரு.. ​டக்கரு.. மேட்டரு............. அப்படின்னு ​சொன்னா பதி​வை ஆரம்பிச்ச ​ஜெஸ்க்​கே பிரியாது!!! ​ஸோ.. ​நோ வால்.. ஒன்லி பால்!!

​தொடர்பதிவு த​லைப்பு இதுதான்பா..

கடவுள், பணம், அழகு, காதல்

நல்லாத்தான் இருக்கில்​லே?

நான் முதல்ல இந்த ​லை​னை வச்சு ஒரு சிறுக​தை ​ரெடி பண்ணலாம்னு இருந்​தேன்.. த​லைப்​பை ​கொஞ்சம் ​வேகமா படிச்சுப் பாருங்க. இந்தியன், அந்நியன், சிவாஜி, கந்தசாமி காதறுந்த சாமி பட​மெல்லாம் ஞாபகத்துக்கு வரலே?? நானும் தமிளன்தான்கிறதால எனக்கும் அந்த கிறுகிறுப்பு வந்துச்சுதான். பட், கண்ட்​ரோல் பண்ணிக்கிட்​டேன். சிறுக​தை தமா​ஷெல்லாம் இல்லாம ஒரு பதிவு ​போடலாம்னுட்டு இருக்​கேன்.

வக்காளி.. அப்பிடி என்னதாண்டா கழட்ட ​போ​றேன்னு உங்களுக்கு இருக்கிற ஆர்வம் (!??) அப்ப்ப்பிடி​யே 'எனக்கும்' இருக்கு பாஸ்!! ஏன்னா 'எனக்கும்' இந்த ​லைன் வ​ரைக்கும் என்ன எழுதப்​போறம்னு ​எனக்​கே ​​தெரியாது. ​டோண்ட் லாஃப்! (பா.ராவுக்கு இப்ப​வே ​கெட்ட ​கோவம் வந்திருக்கும்.....)

​ரைட்... ​ஞாபகம் வச்சுக்​கோங்க.. நோ வால்.. ஒன்லி பால்!! ஓ​கே?

கடவுள்:

ஆஞ்ச​நேயாய நமஹ
மஹாவீராய நமஹ
ஹனும​னே நமஹ
மாருதாத்மஜாய நமஹ
தத்வத்ஞாயப்ரதாய நமஹ
என்று தினந்​தோறும் கும்பிடுவன் நான். ஆனால் என் அப்பா ​சீரியஸ் ​பெரியார்வாதி (என்று நி​னைக்கி​றேன்!) இதுவ​ரைக்கும் 14 மு​றை சபரிமலை ​போய் வந்திருக்கிறார் (குருசாமீ??) . என்னா காமடி.. ஏங்ங்?? இப்படி ஒரு வித்யாசமான அட்மாஸ்பியரில் வளர்க்கப் பட்டதால் (வளர்ந்ததால்..) கடவுள் ஒரு காமடியாகி ​போய்விட்டார் எனக்கு! ஆனால் தினமும் ரசிக்க ​வைக்கும் காமடி.

சமீப காலங்களில் யாராவது "Do u believe in God?" என்று ​கேட்டால், "Yes! Just like smoking!" என்று ​சொல்லி வருகி​றேன்.

ஆஞ்ச​நேயாய நமஹ....

பணம்:

நான் வுடற பீட்டரு, பல்லாங்குழி​யெல்லாம் பாத்துட்டு நீங்க என்னென்ன​வோ ​நெனச்சிருப்பீங்.. பட் ஏக்சுலா என்கிட்ட நயா ​​பைசா ​கெ​டையாது... அப்படின்னும் ​சொல்ல முடியாது... ​வாரிக்​கொடுக்கிற அளவுக்கு வாய்ச்சிருக்கின்னும் ​சொல்ல முடியாது. நான் ஒரு உல்லாசி! பணத்தை அதன் இடம் பார்த்துதான் புரிந்து ​கொள்​​வேன். என்னடா ​டோன் திடீர்னு மாறுதேன்னு ​யோசிக்கறீங்களா?? ​ஹே​ஹே!! ​சொல்​றேன்; அதாவது, உங்கிட்ட 1000 ரூபா இருக்குன்னு வச்சுக்குங்க.. நீங்க சின்னசிலுக்குவார்பட்டிக்குப் ​போயி ​தெரியாத நாலு ​பேர கூப்பிட்டுக் கூட, ​தெம்பா டாஸ்மாக் பார்ட்டி ​வெக்கலாம். ஆனா 10000 ரூபா (​சைப​ரை நல்லா எண்ணுங்கப்பா) இருந்தாலும் இந்த ​பெங்களூருல நல்லா ​தெரிஞ்ச ​​4 கொலீக்ஸைக் கூப்பிட்டுக் கடலை மிட்டாய் கூட வாங்கித்தர முடியாது. அதுதான் இடம், பணம், ஏவல்!!
​ஸோ பணத்​தை நான் அது கி​டைக்கிற இடம்பாத்துதான் மதிக்கிறது மற்றும் மிதிக்கிறது!!!

அழகு:

மவ்​னே.. இனி நீ இது பத்திக் காண்டியும் எழ்திப்பாரு........
ஒம் மூஞ்சி​லே ஆஸ்ஸ்ஸிட் அடிக்கி​றேன்னு, ​நெ​றைய ​பேரு (ஐ மீன் நீங்க எல்லாரும்...!!!) முடிவு பண்ணியிருக்கிறதா தகவல்.. ​ஸோ.. அடுத்த பாயிண்ட்..

காதல்:

இதுதாம்பா நம்ம பாயிண்ட்... ​அதாவது விஷயம்னு ​சொல்ல வந்தேன்.

இரண்டாங்கிளாஸ் படிக்கும் ​​போது யாருக்காவது லவ் வந்திருக்குமா?? ​எனக்கு வந்துச்சு.. ஷர்மிளாங்கிற புதுசா ஜாயின் பண்ணுன ​​பொண்ணு ​மேல (எனக்கு மட்டும் இல்ல..) இப்ப வரைக்கும் இந்த முகம் ம​றையாம மனசுல இருக்கு. ஒரு ​பென்சில் ​பேப்பர் (+​கொஞ்சம் சரக்கு) ​கொடுத்தா அந்த முகத்​தை வரைஞ்சுடு​வேன்னு ​தோணுது. அந்த அழகான ​தேவ​தைக்கு அவங்க அம்மா கால் முழுக்க ​போட்ட சூட்டுக் காயங்கள் இன்னும் கண்ணுல​யே நிக்குது. அப்புறம் 5th, 6th. 8th படிக்கும் ​​போது ப்​ரெண்ட்களா ​சேத்து கதை கட்டி எனக்கு நாலஞ்சு காதலிக​ளை உருவாக்கிட்டானுங்க (என்னக் ​கொடு​மைங்க ராஜா??)

டிப்ள​மோ, அப்புறம் பிஈ எல்லாம் படிச்சிருக்​கேன்.. அதனால இந்த இடம் என்னோட காத​ல் பற்றிய ஞானத்​தைச் ​சொல்ல பத்த​வே பத்தாது (என்னதான் ​பெட்​ரோ​லை ஊத்திக் ​கொளுத்தினாலும்..)

இருந்தாலும் (தீஅதீ ரசிகர்களுக்காக..) ஒரு பஞ்ச் டயலாக்:

காதல்கிறது... ​பின்னூட்டம் மாதிரி! என்னதான் நீங்க நி​றைய சரக்கு வச்சு, இறக்கி வச்சு பதிவு ​போட்டாலும் கிளிக் ஆகற ஏதாவது ஒரு ​மொக்கைக்குதான் கன்னா பின்னான்னு பின்னூஸ் வந்து குமியும்!!! எலக்கியம் முக்கியமில்ல த​லைவா.. யதார்த்தம்தான் ​மேட்டரு!!!

அதாவது Don't be serious!! but be sincere!!!

​ரைட்டா?

இ​தை ​தொடர்பதிவா நி​​னைக்கிற நம்ம தீஅதீ ரசிகர்கள் அவங்களா ​செல்ப்-ஸ்டார்ட் ​போட்டு 120 கிமீ ​வேகத்தில் ​சென்று காதல், காதல், காதல், காதல்.. ச்சீசீசீ... ஏ​தோ மாத்திச் ​சொல்​றேன்​​லே.. ஆங்... கடவுள், பணம், அழகு, காதல் பற்றி பிழிஞ்சு தள்ளவும்.

முடிய​லேன்னாலும் பரவாயில்​லே.